மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல
பிரிட்டனில் செல்லமாக வளர்த்து வந்த நாயை, பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த அமண்டா ரோட்ஜர்ஸ் என்ற 47 வயது பெண் தான் செல்லப்பிராணியாய் வளர்க்கும் ஷீபா என்ற நாயை மணந்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவர், பல பிரச்னைகளால் சில மாதங்களிலேயே தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். இந்நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்த அமாண்டா, தற்போது தான் வளர்க்கும் நாய் ஷீபாவையே திருமணம் செய்துள்ளார்.
இதுகுறித்து கூறுகையில், என் காதலை ஷீபாவிடம் முட்டிப்போட்டு கூறிய போது தன் வாலாட்டி சம்மதம் தெரிவித்தது என்றும், துயரத்தில் இருக்கையில் சிரிக்க வைத்து ஆறுதல் கூறி ஒரு கணவருக்கு இருக்க வேண்டிய குணத்தை கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்றாலும் தனக்கு ஷீபா தான் முக்கியம் என அமாண்டா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Posted in vannakamlondon


கருத்துகள்
கருத்துரையிடுக