இடுகைகள்

பாகிஸ்தானில் தலித் இந்து பெண்ணுக்கு எம்.பி.பதவி!

படம்
பாகிஸ்தானில் தலித் இந்து பெண் ஒருவர் நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்ற மேல்-சபைக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றது. சிந்து மாகாணத்தில் 12 இடங்களில் 10 இடங்களை முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி கைபற்றியுள்ளது. சிந்து மாகாணத்தில் இருந்து மேல்-சபைக்கு போட்டியிட்ட இந்து தலித் இனப்பெண் கிருஷ்ண குமாரி கோலி (வயது 39) வெற்றி பெற்றார்.   இதற்குமுன்பும் இதே கட்சி சார்பில்தான் ரத்னா பகவன்தாஸ் சாவ்லா என்ற பெண், நாடாளுமன்ற மேல்-சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கிருஷ்ணகுமாரிகோலி, தார் பகுதியில் நங்கர்பார்க்கர் மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். ஒரு ஏழை விவசாய குடும்பத்தினை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. News posted in inneram.com

மனிதன் உருவாது எப்படி?

படம்
உலகின் மிகப்­பெ­ரிய அதி­சயம் மனிதன் என்றால் மனி­தனை உரு­வாக்­கிய கரு­முட்­டையும் விந்­த­ணுவும் அதை­விட அதி­ச­ய­மா­னவை. அவை எவ்­வ­ளவு சிறி­யனவோ அவ்­வ­ளவு பெரிய இரக­சி­யத்தை உள்­ள­டக்கி வைத்­தி­ருக்­கின்­றன. கரு­விற்கு தேவை­யான மர­ப­ணுக்கள் தாயின் கரு­முட்­டை­யிலும் தந்­தையின் விந்­த­ணு­விலும் இருக்கும். விந்­தணு கரு­முட்­டையை அடை­வ­தற்குள் பெரிய போராட்­டமே நடந்­தி­ருக்கும்.  கருப்­பையின் நுழைவுச் சுவர்­களில் இருக்கும் நாடாக்கள் போன்ற அமைப்பில் சிக்கி பாதி விந்­த­ணுக்கள் காணாமல் போக, பிளவுபட்ட வால் மற்றும் வாலே இல்­லாத விந்­தணு என பாதி விந்­த­ணுக்கள் தகுதி நீக்கம் செய்­யப்­பட, நீந்தத் திற­னற்ற விந்­த­ணுக்கள் பாதி­யி­லேயே விருப்ப ஓய்வு எடுத்து கொள்ள, மிச்சம் இருக்கும் சொற்ப அளவு விந்­த­ணுக்கள் தான் கரு­முட்டை இருக்கும் இடத்தின் அரு­கி­லேயே செல்லும். முதலில் கரு­முட்­டையை அடையும் விந்­தணு ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு ஓர் இரசா­யன சமிக்ஞை வெளி­யி­டப்­படும். இதனால் கரு­முட்­டைக்குள் செல்ல முயற்சி செய்யும் மற்ற விந்­த­ணுக்­க­ளுக்கு மின் அதிர்வு போன்ற ஒரு விளைவு ஏற்­படும். ஆகையால் ஒன்­றுக...

காதல் நோயின் அறிகுறிகள்

படம்
காதலில் வீழ்வது என்பது ஒருவித ரசாயன விவகாரம். அது நம் மனித ஜீவராசியின் இனவிருத்தியை உத்தரவாதப்படுத்தும் வகையில் உடலில் தொடர்ச்சியான பலவித ரசாயன மாற்றங்களை உண்டுபண்ணுகிறது என்கின்றனர் அறிவியலாளர்கள். வியாதியை ஒத்ததுதான் காதல் ( காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய், ஞாபகம் வருகிறதா? ). எனவே, ஒரு நோய் ஏற்பட்டால் என்ன விதமான அறிகுறிகள் உடலில் தோன்றுமோ அதே போல, தெளிவாகத் தெரியும் உடல் ரீதியான அறிகுறிகள் காதல் நோயாலும் ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த அறிகுறிகள் என்ன ? வியர்க்கும் கைகள், பசியின்மை ( "பாலுங்கசந்ததடி சகியே படுக்கை நொந்ததடி" ), முகம் உணர்ச்சிப்பெருக்கில் உப்புவது, இதயத்துடிப்பு அதிகமாதல் போன்றவை இவை . காதலுக்கு பல கட்டங்கள் உண்டு. ஒவ்வொரு கட்டமும் ஒருவிதமான ரசாயனப் பொருட்களால் தூண்டப்படும் உடல் ரீதியான மாற்றங்களால் ஆட்டுவிக்கப்படுகின்றது. முதலில் காமம் தோன்றும் ஒரு கட்டம் - இது அடிப்படையான பாலியல் ரீதியான ஒரு வேகம். இது ஈர்ப்பு நிலைக்கு இட்டுச் சென்று பின்னர் உணர்வு ரீதியாக ஒன்று சேரும் நிலைக்கும் பின்னர் அதுவே நீண்ட கால உறவுக...

உலகின் எந்த ஏவுகணை தடுப்பு அமைப்பாலும் கட்டுப்படுத்த முடியாத அணுஆயுத ஏவுகணை: - அறிமுகம் செய்த புதின்

படம்
உலகின் எந்த ஏவுகணை தடுப்பு அமைப்பாலும் கட்டுப்படுத்த முடியாத அணுஆயுத ஏவுகணையை தங்களது ராணுவத்தில் சேர்த்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையின் நாடாளுமன்றத்தில் இரு சபையின் உறுப்பினர்கள் மத்தியில் நடைபெற்ற அரசியல் கருத்தரங்கில் புதின் உரையாற்றினார். அப்போது தனது ஆட்சிக்காலத்தில் ரஷ்யாவில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார முன்னேற்றங்களை பட்டியலிட்டு பேசினார். கடந்த 2017-ம் ஆண்டு ரஷ்யா ராணுவத்தில் 300 புதிய வகை ஆயுதங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ரஷ்யாவின் ராணுவ பலத்தை அதிகரிப்பது, எந்த நாட்டையும் அச்சுறுத்துவதற்கு அல்ல என்று அவர் குறிப்பிட்டார். பின்னர் புதிய ஏவுகணை அமைப்புகளை பிரம்மாண்ட திரைகளில் திரையிட்டு அவற்றின் செயல்பாடுகளை விளக்கினார். வழக்கமாக ஏவுகணைகள் ஏவுமிடத்திலிருந்து புறப்பட்டு பாய்ந்து செல்லும்போது அவற்றின் பாதையை கணித்து தடுக்கலாம், ஆனால் இந்த ஏவுகணைகள் எதிர்பாராத திருப்பங்களுடன் தடைகளை தாண்டி சென்று தாக்கும் வல்லமை படைத்தவையாகும். இந்த ஏவுகணைகளால் ரஷ்ய எல்லைகளில் நேட்டோ கூட்டுப்படைகள் ஏற்படுத்தியுள்ள தடுப்பு ஏற்பாடுகள்...

பொண்டாட்டியிடம் திட்டு வாங்கமல் இருக்க அமெரிக்கர் செய்யும் காரியத்தைப் பாருங்கள்

படம்
அமெரிக்காவில் மனைவியிடம் திட்டு வாங்குவதை விட, சிறை தண்டனையே மேலானது என்று எண்ணி ஒரு கணவர் அடிக்கடி சிறை சென்று வருகிறார். கன்சாஸ் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் ஜான் (71). இவர் மனைவியிடம் திட்டுவாங்குவதை விட, சிறை தண்டனையே மேலானது என்று எண்ணி அடிக்கடி சிறைவாசம் அனுபவித்து வருகிறார். வங்கி கொள்ளை முயற்சியில் பொய்யாக ஈடுபட்டு 6 மாத சிறை தண்டனை அனுபவித்தவர், சமீபத்தில் தான் விடுதலையானார்.  ஆனால் அடுத்த சில நாட்களிலேயே மற்றொரு வழக்கில் தன்னை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தில் சரணடைந்துவிட்டார். இது குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், லாரன்ஸ் நல்ல மனிதர். குற்றங்களுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. மனைவியிடம் சண்டையிடுவதை தவிர்க்கவும், பழி பேச்சுகளை தவிர்க்கவுமே சிறைத்தண்டனைக்கு உள்ளாகிறார். தொடர்ந்து தவறு செய்யாமல் பொய் சொல்லி சிறை தண்டனை அனுபவிக்கும் ஜானுடன், அவர் மனைவியை சமாதானப்படுத்தும் முயற்சியாக பொலிசார் இருவருக்கும் கவுன்சிலிங் கொடுத்து வருகிறார்கள் Posted in seithy.com

கென்யாவில் 39 பெண்களை மணந்து 103 குழந்தைகளுக்கு தந்தையான நபர்!

படம்
கென்யாவில் வாழும் நபர் ஒருவர் 39 பெண்களை திருமணம் செய்து கொண்டு 103 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நண்டோலியா கிராமத்தை சேர்ந்தவர் நபி யோகனா (68), தன்னை பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தீர்க்கதரிசி ஜானின் அவதாரம் என நபி கூறி கொள்கிறார். இவர் இதுவரை 39 பெண்களை திருமணம் செய்து கொண்ட நிலையில் 103 பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளார். இதோடு யோகனாவுக்கு 232 பேர குழந்தைகளும் உள்ளனர், இவரின் மூன்று மனைவிகள் உயிரிழந்து விட்டனர். சிறுவயதிலிருந்து மாமிசம் சாப்பிடாத இவர் ஒருமுறை கூட முகத்தை ஷேவ் செய்து கொண்டதில்லை. யோகனா கூறுகையில், நான் என் வருங்கால மனைவிகளை தேடி செல்வதில்லை, கடவுள் தான் என்னை நோக்கி அனுப்பி வைக்கிறார். கடவுளின் சொல்படி நான் 48 பெண்களை மொத்தம் திருமணம் செய்து கொள்ளவேண்டும், அதை செய்வேன் என கூறியுள்ளார். தான் 280 ஆண்டுகள் வாழ்வேன் என கூறும் யோகனா அதன் பின்னர் இறந்து மீண்டும் மறுபிறவி எடுத்து அடுத்த 2700 ஆண்டுகளுக்கு வாழ்வேன் என கூறுகிறார்! Posted in seithy.com

இறந்த மம்மியை மம்மியாக்கி வாழ்ந்து வந்த பாட்டி

படம்
உக்ரைனில் மூதாட்டி ஒருவர் இறந்த தன் தாயுடன் 30 ஆண்டுகள் வாழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உக்ரைனின் மைகோலைவ் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி குறித்து அக்கம்பக்கத்தினர் பொலிசார் புகார் அளித்துள்ளனர்.அதன் பின் பொலிசார் அந்த மூதாட்டி இருக்கும் வீட்டை சோதனை செய்து பார்த்த போது, அவரின் தாயார் உடல் சோபாவில் கிடத்தப்பட்டிருந்தது. வெள்ளை நிற ஆடை அணிவிக்கப்பட்டு, தலை மூடப்பட்டிருந்தது. நீல நிற ஷூ, பச்சை நிற சாக்ஸ் அணிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து பொலிசார் மூதாட்டிக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி அருகில் இருப்பவர்களிடம் இவர் குறித்து விசாரித்த போது யாரிடமும் அவர் பேசுவதில்லை என்று கூறியுள்ளனர். Posted in seithy.com